
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. கடந்த 11ஆஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 13 ரன்களுடனும் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.