‘அதர்வா: தி ஒரிஜின்’ - நாயகனாகத் தோன்றும் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றவுள்ளார்.

First look of MS Dhoni in graphic novel ‘Atharva: The Origin’ is released (Image Source: Google)
ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் கிராஃபிக் நாவல் ‘அதர்வா: தி ஒரிஜின்’. விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிகெட் வீரரான எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாவல் குறித்து தோனி கூறுகையில்,“இந்த நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ‘அதர்வா: தி ஒரிஜின்’ ஆர்வத்தை தூண்டக் கூடிய விறுவிறுப்பான கதைக்களத்தையும், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட ஒரு கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, “இது என்னுடைய கனவு படைப்பு. என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று. இதை நாங்கள் உருவாக்க பல ஆண்டுகளை செலவு செய்துள்ளோம். அதர்வா கதாபாத்திரத்தில் தோனி தோன்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
தோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காமிக்ஸ் விரைவில் அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News