
Five-Member Panel To Probe Sri Lanka Cricketers' Breach (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் இழந்தது.
இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்துள்ளார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா குணதிலக ஆக்கணொளியில் இடம்பெறவில்லை.