
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் உன்முக் சந்த். அந்த தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அற்புதமான ஒரு சதமடித்து உலகக் கோப்பையை இந்தியாவிற்காக கைப்பற்றி கொடுத்தார்.
அப்போது அனைத்து பத்திரிக்கைகளும் உன்முக் சந்த்தை பாரட்டி எழுதியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்றெல்லாம் புகழ்ந்தது. ஆனால் அப்படிப்பட்ட வீரர், இந்தியாவில் தன்னுடைய திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட சென்றுவிட்டார
அவருடன் 2012 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வரும் சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு உலகக் கோப்பையை பெற்று தந்த உன்முக் சந்த், அமெரிக்காவிற்காக கிரிக்கெட் விளையாட சென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.