டி20 உலகக்கோப்பை: கோப்பையை வெல்லும் அணி குறித்து சவுரவ் கங்குலி கருத்து!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவித்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Ganguly picks favourite between NZ-AUS ahead of T20 World Cup showdown Ganguly picks favourite between NZ-AUS ahead of T20 World Cup showdown](https://img.cricketnmore.com/uploads/2021/11/gangulys-big-statement-on-team-india-says-if-cricket-is-a-religion-in-india,-then-fans-are-the-biggest-devotees-lg.jpg)
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சம பலத்துடன் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் யார் வெல்வார்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
Trending
இது குறித்து பேசிய அவர் "சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி தான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். நாம் டிவியில் பார்ப்பதைவிட நியூசிலாந்து அணிக்கு அதிக துணிச்சலும் போராடும் குணமும் உள்ளது.
Also Read: T20 World Cup 2021
அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். அவர்கள் சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளனர். இது நியூசிலாந்திற்கு நேரம் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now