
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்தவர் மிஸ்பா உல் ஹக். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்து, இளம் வீரர்கள் நிறைந்த வலுவான அணியாக உருவாக்கினார்.
அதிலும் 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை படுதோல்விக்கு பின்னர், பாபர் அசாம் தலைமையிலான இளம் துடிப்பான அணியை கட்டமைத்ததில் மிஸ்பா உல் ஹக்கின் பங்களிப்பு அளப்பரியது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லா காலக்கட்டத்திலும் திறமையான வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த அணி வீரர்களின் ஃபிட்னெஸ் மோசமாக இருந்தது. காலங்காலமாக அவர்களது ஃபீல்டிங்கும் மோசமாக இருந்திருக்கிறது.
ஃபிட்னெஸ், ஃபீல்டிங் ஆகிய இரண்டு விஷயங்களிலும் பாகிஸ்தான் அணியை தேற்றிவிட்டு டி20 உலக கோப்பைக்காக தயார்படுத்திய மிஸ்பாவும் வக்காரும், ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றதும், தாங்கள் வகித்த பதவிகளை ராஜினாமா செய்தனர்.