-mdl.jpg)
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தனது முடிவு குறித்து பேசிய ரோஹித் சர்மா ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் நிறைய விளையாடிய அனுபவம் இருப்பதால் இலக்கை துரத்துவது நல்ல முடிவை தரும் என்றும் அவர் கூறியுள்ளார் . இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்துள்ள ரோகித் சர்மா, ரிஷப் பந்த் இன்றைய விளையாடவில்லை என்று அறிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர், “ஆசிய கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதில் சோதனை செய்ய இடம் இல்லை. டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இன்னும் இந்தியா ஐந்து போட்டிகளில் தான் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடுகிறது.