
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பைக்கு முன்பு மிகவும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம் ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்படும் இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதுதான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய தேர்வு குழு ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டது. இந்த அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார்கள்.
இந்த அணியில் சாஹல் நீக்கப்பட்டது, சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக வைக்கப்பட்டது, ஆப் ஸ்பின்னர் யாரையும் தேர்வு செய்யாதது என மூன்று விஷயங்களும் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் இதில் இல்லாத ஒரு புதிய விஷயத்தை கொண்டு வந்து தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 17 பேர் கொண்ட அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவருக்கு மாற்றாகவும் அதே சமயத்தில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்காக விளையாடும் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கின்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் இருக்கிறார்கள்.