
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக இன்றுடன் ஐம்பது வருடங்கள் ஆகிறது. இதனை நினைவுக்கூறும் விதமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையிலிருந்து சுனில் காவஸ்கருக்கு பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா தொப்பியை அன்பளிப்பாக வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின்‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், சுனில் காவஸ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.