
Golden chance for Sri Lanka T20 cricketers as replacement to unavailable foreigners (Image Source: Google)
நடப்பாண்டு பயோ பபுள் சூழலில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கியது. மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு தொற்று உறுதியானது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியது.
இதனால நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.
ஆனால் சர்வதேச போட்டிகள் மற்றும் கரோனா வைரஸ் தொற்று, டி20 உலக கோப்பைக்கு தயாராகுதல் போன்ற காரணத்தினால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.