
ஐபிஎல் 15ஆவது சீசனின் ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 16 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 14 ரன்களுக்கு நடையை கட்டினார்.
4ம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் ரன்னே அடிக்கமுடியாமல் திணறி 10 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 10 ஓவரில் 70 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, அதன்பின்னர் ரன்னே அடிக்க முடியாமல் திணறியது. ஹர்திக் பாண்டியாவும் ரஷீத் கானும் சேர்ந்து மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.