ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Gujarat Titans vs Rajasthan Royals, Qualifier 1 – Cricket Match Prediction (Image Source: Google)
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது.
அதேவேளையில் ரித்திமான் சாஹா, கடந்த சில ஆட்டங்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சில் பவர் இந்த சீசனில் அதிக 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மொகமது ஷமியுடன் அல்ஸாரி ஜோசப், லாக்கி பெர்குசன் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றில் 2ஆவது இடம் பிடித்திருந்தது. பந்து வீச்சை பொறுத்தவரையில் ராஜஸ்தான் அணி சுழலில் பலமாக உள்ளது. யுவேந்திர சாஹல் விக்கெட் வீழ்த்திவதும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த இரு ஆட்டங்களும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் படி தகுதி சுற்று 1, எலிமினேட்டர், தகுதி சுற்று 2, இறுதிப் போட்டி ஆகிய ஆட்டங்கள் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டால் லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை வகித்திருந்தது என்பதை கணக்கிட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இறுதிப் போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் அன்றைய தினம் மழையால் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் (30-ம் தேதி) நடத்தப்படும். இறுதிப் போட்டியும் அதற்கு முன்னதாக நடைபெறும் தகுதி சுற்று 2 ஆட்டமும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எலிமினேட்டர், இரு தகுதி சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் தேவைப்படும் பட்சத்தில் ஆட்டத்தை 5 ஓவர்களாக குறைத்து நடத்தலாம். 5 ஓவர் போட்டியை முடிக்க திட்டமிட முடியாத பட்சத்தில், நிபந்தனைகள் அனுமதித்தால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவினால் லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை வகித்ததோ அந்த அணி வெற்றியாளராக கருதப்படுவார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News