
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது . 16ஆவது சீசனாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் இதுவரை 47 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன . நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது . சென்ற முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது .
இந்தப் போட்டித் தொடரின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஒரு சில தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் 48 வது போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது .
ஆனால் போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்தால் மற்ற அணிகளுக்கே வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி .