
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில், முதல் போட்டியில் இந்திய அணி கடைசிவரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி புனேவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் பதும் நிஷங்கா 33, குஷல் மெண்டிஸ் 53, அசலங்கா 37, ஷனகா 56 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 206/6 ரன்களை குவித்தது. அர்ஷ்தீப் சிங் 5 நோ-பால்களை வீசி சொதப்பினார். அதேபோல் ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் இருவரும் தலா ஒரு நோ-பால்களை வீசினார்கள். இதனால்தான், இலங்கை அணியால் 200+ ரன்களை அடிக்க முடிந்தது.
இதையடுத்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 2, ஷுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, ஹார்திக் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 ஆகியோர் படுமோசமாக சொதப்பி நடையைக் கட்டினார்கள். அடுத்து சூர்யகுமார் யாதவ் 51, அக்சர் படேல் 65, ஷிவம் மாவி 26 ஆகியோர் கடைசிவரை வெற்றிக்காக போராடியும், இந்திய அணி 20 ஓவர்களில் 190/8 ரன்களை மட்டும் சேர்த்தது.