
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியா முன்னாள் வீரர் கீரென் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை எடிக்கும் பட்சாத்தில், ஐபிஎல் தொடரில் 20ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்பைப் பெற்றுள்ளார். முன்னதாக கீரன் பொல்லார்ட் 33 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், ஹர்திக் பாண்டிய 32 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் எம்எஸ் தோனி 72 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.