சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சௌரவ் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி படைத்துள்ளார். அவர் 13 போட்டிகளில் விளையாடி 17 சிக்ஸர்களை விளாசி இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். எனினும், தற்போது இந்த பெரிய சாதனையை முறியடிக்க ஹர்திக் பாண்டியாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அதில் 15 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.
Win Big, Make Your Cricket Tales Now