
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பளிக்காதது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.
இந்நிலையில் அவரால் பந்து வீச முடியாததே, அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவருகின்றனர். இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்து வீச முடியாமல் போனால் அவரால் இனி இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சரன்தீப் சிங்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்காதது ஏன்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள பிறகு அவரால் வழக்கம் போல் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இந்திய அணிக்காக ஆடும் லெவனில் அவர் இடம் பெறும் போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களும், 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்களும் பந்து வீசியாக வேண்டும்.