
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் கே.எல் ராகுல் (5) விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த மிரட்டல் நாயகனான சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கூட்டணி சேர்ந்த விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஜோடி போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.