
Hardik Pandya Reports At NCA To Prove Fitness Ahead Of IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் வீரர்களை அழைத்து பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
ஆனால் பெங்களூரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள சில வீரர்கள் மட்டும் இன்னும் ஐபிஎல்-க்கு புறப்படவில்லை. இதற்கு காரணம் பிசிசிஐ போட்ட கண்டிஷன் தான்.
ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அதனை மறைத்துத் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளன. இதனால் சர்வதேச போட்டிகளில் பாதிப்படைகிறது. கடந்த சீசனின் போது ஹர்திக் பாண்ட்யா இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஏனென்றால் கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக மும்பை அணி அறிவித்தது.