
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக கடைசி பந்துவரை போராடி தோற்றது. குறிப்பாக, கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பு இருந்தும் பாகிஸ்தான் அணி தோற்றதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் களத்தில் கண்ணீர் விட்டதையும் பார்த்தோம்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில், குறிப்பாக ஜிம்பாப்வேக்கு எதிராக தோற்றதால், இன்று நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் உக்கிரமாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீச ஆரம்பித்தார்கள். பெர்த் மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் என அனைத்தும் இருந்தது. ஷாஹீ்ன் அஃப்ரிடி, நஷிம் ஷா, ஹரிஸ் ராவுஃப் ஆகியோர் இதனை பயன்படுத்தி நெதர்லாந்து பேட்டர்களை கறதவிட்டனர்.