Advertisement
Advertisement
Advertisement

இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவைத் தவிர்த்து இன்னும் பல சிறந்த அணிகள் உள்ளன என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 21, 2024 • 03:23 PM

வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
July 21, 2024 • 03:23 PM

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.

Trending

இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஆனால் பிசிசிஐ இந்திய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் படி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட மறுத்தால், அவர்களை தவிர்த்து மற்ற அணிகளை வைத்து இத்தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “கடந்த வருடம் ஐசிசி நடத்தில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடியதைப் போல அவர்கள் தற்போது பாகிஸ்தானுக்கு வர வேண்டும்.

விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது என பலவரும் எண்ணற்ற முறை கூறியுள்ளனர். அதேபோல சில இந்திய வீரர்களும் பாகிஸ்தானில் விளையாட தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை என்ற கருத்தானது அர்த்தமில்லாத ஒன்று. ஆனால் நாடு மற்றும் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் கருத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் ஏற்கனவே கூறியது போல், சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். ஒருவேளை இத்தொடரில் பங்கேற்க இந்தியா வர விரும்பவில்லை என்றாலும், அவர்களைத் தவிர்த்து மற்ற அணிகளை வைத்து இத்தொடரை எங்களால் நடத்த முடியும். இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவைத் தவிர்த்து இன்னும் பல சிறந்த அணிகள் உள்ளன” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement