
இந்திய கிரிக்கெட்டர்களில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 50, 100, 150, 200, 300, 350, 400 விக்கெட்களை கைப்பற்றியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஆனால் அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரராக குறிப்பிட முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனியார் விளையாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த மஞ்ச்ரேக்கர்,“ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என மக்கள் அஸ்வினை பற்றி பேசத் தொடங்கும் போது, எனக்கு அதை ஏற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.