Advertisement

விரைவில் களத்திற்கு திரும்புவேன் - டூ பிளெஸிஸ் ட்வீட்டால் குஷியான ரசிகர்கள்!

பிஎஸ்எல் தொடரின் போது காயமடைந்த ஃபாஃப் டூ பிளெஸிஸ், விரைவில் களத்திற்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 14, 2021 • 15:27 PM
Have concussion with memory loss, but I'll be fine: Faf du Plessis
Have concussion with memory loss, but I'll be fine: Faf du Plessis (Image Source: Google)
Advertisement

அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் நேற்றைய போட்டியின் போது, பெஸ்வர் ஸால்மி அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டூ பிளெஸிஸ் சக வீரர் மீது மோதி  மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். 

இதையடுத்து அவரை பரிசோதித்த அணியின் மருத்துவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிசீலித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டூ பிளெஸிஸிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Trending


இந்நிலையில் அவர தற்போது மருத்துவமனையிலிருந்து தனது ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளார். இத்தகவலை ஃபாஃப் டூ பிளெஸிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து டூ பிளெஸிஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ரசிகர்களில் ஆதரவுக்கு நன்றி. இன்று நான் மருத்துவமனையிலிருந்து எனது ஹோட்டலுக்கு வந்தடைந்தே. தலையில் அடிபட்டதன் காரணமாக சில நினைவுகள் மற்றும் மூளையதிர்ச்சியில் இருக்கிறேன். ஆனாலும் நான் நலமுடன் தான் உள்ளேன். விரைவில் களத்திற்கு திரும்புவேன் என நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

ஃபாஃப் டூ பிளெஸிஸ் இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் அவர் குணமடைந்ததை அடுத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement