'He clearly hasn't learnt anything' - Gavaskar tears into Shivam Dube after game-changing 25-run ove (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 19.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.