Advertisement

ஜடேஜா இந்திய அணியையும் வழிநடத்துவார் - அம்பத்தி ராயூடு நம்பிக்கை!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஜடேஜா, விரைவில் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 26, 2022 • 09:39 AM
He has it in him to lead India one day: Ambati Rayudu all praise for CSK skipper Ravindra Jadeja
He has it in him to lead India one day: Ambati Rayudu all praise for CSK skipper Ravindra Jadeja (Image Source: Google)
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த ஜடேஜாவே சரியானவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதன் மூலம் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்துவிட்டது.

Trending


சென்னை அணியின் தொடர் தோல்விகள் ஜடேஜாவின் கேப்டன்சி மீதான கேள்வியை எழுப்பியுள்ளதால், ஜடேஜா கேப்டன் பதவிக்கு சரியானவர் இல்லை அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதே அவருக்கும், சென்னை அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றே பல கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சென்னை அணியின் ரசிகர்கள் மனநிலையும் இதுவாகவே உள்ளது.

இந்தநிலையில், ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு, ஜடெஜே விரைவில் இந்திய அணியையும் வழிநடத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்பத்தி ராயூடு பேசுகையில், “தோனியின் இடத்தை ஈடு செய்வது ஒருபோதும் நடக்காது, எத்தனை வீரர்கள் வந்தாலும் தோனியை போன்று செயல்பட முடியாது. ஆனால் தோனி இருப்பதால் ஜடேஜாவிற்கு பல வேலைகள் இலகுவாகியுள்ளது. தேவையான அனைத்து விசயங்களையும் ஜடேஜா, தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். 

ஜடேஜா மிக சிறந்த கேப்டனாக உருவெடுப்பார். தற்பொழுது சென்னை அணியை வழிநடத்தி வரும் ஜடேஜா, நிச்சயமாக ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணியையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஜடேஜாவை போன்ற இளம் வீரர்கள் கேப்டனாக இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம் தான், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு ஜடேஜாவின் துடிப்பான கேப்டன்சி மூலம் புதிய உத்வேகம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement