Advertisement
Advertisement
Advertisement

இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் 150 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் - தினேஷ் கார்த்திக்

இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

Advertisement
‘He has potential to take the game away in whiff of a breath’: Karthik
‘He has potential to take the game away in whiff of a breath’: Karthik (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2021 • 07:26 PM

இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா சூழல் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2021 • 07:26 PM

இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டி கடந்த 14 வருடங்களாக நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. 

இதனால் முக்கியமான தருணங்களில் இருந்து போதுமான தகவல்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். பெரிய தொடர்களில் அழுத்தமான தருணங்களைக் கையாள இந்த அனுபவம் அவசியமாகிறது. எனவே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement