
'He might be the biggest key for India': Steyn (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் நான்கு நாட்களே மீதமுள்ள நிலையில், போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப் போகும் வீரர்கள் யார் யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.