
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மற்ற ஐந்து பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 39 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 43 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.