
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லரை தவிர்த்து வேறு யாரும் சோபிக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 22 ரன்கள், சஞ்சு சாம்சன் 14 ரன்கள், தேவ்தத் பட்டிக்கல் 2 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். நம்பிக்கை நாயகனான ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை அடித்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.
இதன்பின்னர் ஆடிய குஜராத் அணி ஓப்பனிங்கே அதிர்ச்சி தான். தொடக்க வீரர் விருதிமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேறினார். இதன்பின் வந்த மேத்யூவ் வெட் 8 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் குஜராத் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (34 ) - சுப்மன் கில் (45) என சேர்த்தனர்.