Advertisement

எந்த நெருக்கடியிலும் என்னாள் பந்துவீச முடியும் - சாய் கிஷோர்

எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 02, 2021 • 15:55 PM
I can bowl in any crisis - Sai Kishore
I can bowl in any crisis - Sai Kishore (Image Source: Google)
Advertisement

டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.

Trending


பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு சாய்கிஷோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பவுலராக சென்று நாடு திரும்பிய அவர் தனது முதல் ஆட்டத்தில் 30 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். 

இப்போட்டி குறித்து பேசிய சாய் கிஷோர்,“எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் இதை விட சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று தோன்றுகிறது. எந்தவித நெருக்கடியிலும் எனது திறமையை வெளிப்படுத்த முடியும். இந்த ஆடுகளம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement