
'I Feel Very Comfortable When Axar Is At The Other End', Says Delhi All-Rounder Lalit Yadav (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ்யை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த், மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் ஷர்மாவும் தனது பங்கிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தார்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்வி ஷா (38), செய்பர்ட் (21), மந்தீப் சிங் (0), ரிஷப் பந்த் (1) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிரடி வீரர் ரௌமேன் பௌலும் (0) ஏமாற்றினார்.