WPL 2025: தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கிய கேட் கிராஸ்!
தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காகவே மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதாக கேட் கிராஸ் தெரிவித்துள்ளார்.
![I Need To Take Time To Rehab My Injury Fully: Kate Cross On Withdrawing From WPL WPL 2025: தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கிய கேட் கிராஸ்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/i-need-to-take-time-to-rehab-my-injury-fully-kate-cross-on-withdrawing-from-wpl1-mdl.jpg)
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் விலகினர்.
Trending
இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை கேட் கிராஸ் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக இந்த முடியை எடுத்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதற்கான எனது முடிவு கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் ஒரு பெரிய கோடைகாலத்திற்கு முன்னதாக எனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காகவும், எனது மன மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் நான் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் எனது நேரத்தை தவறவிடுவதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இருப்பினும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி மற்றும் மற்ற வீராங்கனைகள் அனைவரும் இணைந்து கோப்பையை தக்கவைப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். நான் எனது சொந்த ஊரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எனது ஆதரவை அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஜார்ஜியா வேர்ஹாம், ஏக்தா பிஷ்ட், எஸ் மேக்னா, சோஃபி மோலினக்ஸ், டான் மோலினக்ஸ், பிரேமா ராவத், ஜோஷிதா விஜே, ராகவி பிஷ்ட், ஜாக்ரவி பவார், கிம் கார்த், ஹீதர் கிரஹாம்.
Win Big, Make Your Cricket Tales Now