
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 15ஆவது ஐபிஎல் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது இன்று மே 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.