Advertisement

எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!

ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்க்ள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2025 • 12:14 PM

அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2025 • 12:14 PM

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும், ஜோஷ் இங்கில் 38, நெஹால் வதேரா 48 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது, அவர் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவர்கள் நிச்சயமாக நன்றாக பேட்டிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. இதுபோன்ற பெரிய ஆட்டங்களில் அது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

Also Read: LIVE Cricket Score

நான் குறிப்பிட்டது போல் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள், எங்களை அழுத்தத்தில் தள்ளினர், அதனால் நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை என்று நினைக்கிறேன். அதற்காக நான் விக்கெட்டை குறைகூற மாட்டேன். நாங்கள் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டியிருந்தால், அது யாரோ ஒருவர் சரியான லென்த் பந்து வீசியிருக்கலாம் அல்லது சரியான புள்ளியில் சரியான பந்து வீச்சாளர் வீசியிருந்தால் முடிவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement