
ICC Imposes Fine On India After 3rd ODI Against South Africa, KL Rahul Pleads Guilty (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது தென் ஆப்பிரிக்க அணி.
இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றது.