
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லக்னோவிலுள்ளா ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசனும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் டி காகுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இது இந்ததொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதமாகும்.