
'ICC Should Think And Then Take A Decision': Gavaskar Wants A Formula To Decide WTC Final Winner (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டமான ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.
வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதும் பாதிக்கப்பட்டது. லேசான சாரல் மழை தொடர்ந்து நீடித்ததால் 4ஆம் நாள் ஆட்டம் முழுவதுமே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.