
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.
இப்போட்டியில் 506 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய இலக்கை அடிப்பது மிக மிகக்கடினம். அதுவும் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 148 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, அந்த அணி இந்த இலக்கை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற எண்ணத்தில், 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் முடிவதற்கு முன்பாக பாகிஸ்தானிடம் பேட்டிங்கை கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. முழுமையாக 2 நாட்கள் எஞ்சியிருப்பதால், எளிதாக பாகிஸ்தானை ஆல் அவுட் செய்துவிடலாம் என ஆஸ்திரேலிய அணி நினைத்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் எண்ணத்தை தகர்த்தனர் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாமும், அப்துல்லா ஷாஃபிக்கும். 3ஆம் நாள் ஆட்டம் முடியும் முன்பே ஒரு விக்கெட்டை பாகிஸ்தான் இழந்துவிட்டது. இமாம் உல் ஹக் ஆட்டமிழந்துவிட்டார். 4ஆம் நாளான இன்றைய ஆட்டத்தில் அசார் அலியும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.