
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் ஆர் சி பிரியாணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது . அந்த அணி மீது இருக்கக்கூடிய எல்லா போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .
ஐபிஎல் தொடரில் சிறந்த அணியை பெற்றிருந்தும் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை . அந்த அணிக்காக விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், கிளன் மேக்ஸ்வெல், முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சன், ஜாக் காலிஸ் போன்ற திறமையான வீரர்கள் விளையாடி இருந்தாலும் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை .
2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று வருடங்களும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது . ஆனால் மூன்று முறையும் தோல்வியே சந்தித்துள்ளது பெங்களூர் அணி . பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு தோனி போன்ற ஒரு கேப்டன் இல்லாததே மிகப்பெரிய காரணம் என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் .