
இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஜென்மேன் மலான் 22, பவுமா 8, மார்க்கரம் 0 (5) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டி காக் 48, ஹென்ரிச் கிளாசன் 74, டேவிட் மில்லர் 75 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 249/4 ரன்களை சேர்த்தது.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் ஷிகர் தவன் 4, ஷுப்மன் கில் 3, ருதுராஜ் 19 , இஷான் கிஷன் 20 ஆகியோர் டெஸ்ட் விளையாடி ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து ஆட்டமிழந்த பிறகு சஞ்சு சாம்சன், ஷர்தூல் தாகூர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.