
IND v SA, 1st T20I: Wicket was spicy, batting unit failed to adapt, says SA skipper Bavuma (Image Source: Google)
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணியில் கேசவ் மஹராஜ் 41, பர்னல் 25 மற்றும் மார்கரம் 24, ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்சல் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.