
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 ரன்களில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 13 ரன்னிலும், ஜேமி ஓவர்டன் 5 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அபாரமாக விளையாடி வந்த பிரைடன் கார்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.