Advertisement

IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பந்த்!

கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தொற்றிலிருந்து மீண்டு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 22, 2021 • 10:51 AM
Ind vs Eng: Rishabh Pant returns to team after COVID-19 scare
Ind vs Eng: Rishabh Pant returns to team after COVID-19 scare (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் செய்தது. நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இப்போது டர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இந்திய வீரர் ரிஷப் பந்த்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Trending


இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் காரணமாக டர்ஹாம் சென்ற இந்திய அணியினருடன் பயிற்சி ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ரிஷப் பந்த் டர்ஹாமிலுள்ள சக இந்திய அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். மேலும் அவர் தனது பயிற்சியையும் தொடங்கியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement