
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியமான மூன்று சாதனைகளை நேற்றைய ஒரே போட்டியில் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் மொத்தம் 36 பந்துகளை சந்தித்த ரோஹித் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 55 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது சாதனைகள் பின்வருமாறு..
அதிக 50+ ஸ்கோர் : டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50 + ரன்களை விளாசியவர் என்ற சாதனையை இதுவரை விராட் கோலி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 25ஆவது அரை சதத்தை அடித்த ரோகித் ஏற்கனவே 4 சதங்கள் விளாசி உள்ளதால் மொத்தம் 29 முறை 50 + ரன்கள் அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.