
IND vs SA, 1st T20I: Umpires gives warning to the arshdeep singh while bowling (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் ஆர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிலும் இத்தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், பும்ராவும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆர்ஸ்தீப் சிங்கும், தீபக் சாஹரும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக ஆர்ஷ்தீப் சிங் வீசிய 2ஆவது பந்தில் குயின்டன் டி காக் விக்கெட்டையும், 5ஆவது பந்தில் ரூஸ்சோ விக்கெட்டையும், கடைசி பந்தில் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை ஆர்ஸ்தீப் சிங் கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது.