
IND vs SL: India end up with 132 (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
முன்னதாக கரோனா தொற்று பரவல் காரணமாக 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம்பிடித்தனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் - ருதுராஜ் கெய்க்வாட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல்லும் 29 ரன்களில் நடையைக் கட்டினார்.