
India are the front-runners to win Cape Town Test as their batting has been more solid: Dinesh Kart (Image Source: Google)
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் செவ்வாய் கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் தலா 1-1 என்று வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது டெஸ்ட், இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற கட்டம் தான்.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி கேப் டவுனில் இதுவரை வென்றதே இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் 2007ஆம் ஆண்டு மோசமான அனுபவமாக கேப் டவுன் இருந்தது. அங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வென்றது இல்லை என்பதை அறிவேன். ஆனால் இம்முறை நிலைமை மாறும். இந்தியா நிச்சயம் கேப் டவுன் டெஸ்டில் வெல்லும்.