
India bowl out Sri Lanka for 126, winning by 38 runs! (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிகர் தவான் 48 ரன்களையும் சேர்த்தனர்.