Advertisement

டிஆர்எஸில் கவனம் செலுத்தியதாலே இந்திய அணி வீழ்ந்தது - டீன் எல்கர்! 

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் எடுக்கப்பட்ட டிஆர்எஸ் தங்களின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக டீன் எல்கர் தற்போது கூறியுள்ளார்

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2022 • 15:16 PM
'India forgot about game': Dean Elgar on DRS outburst in Cape Town Test
'India forgot about game': Dean Elgar on DRS outburst in Cape Town Test (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி பெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வென்றது. 

இந்த போட்டியில் 3ஆவது நாளில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அந்த அணி கேப்டன் டீன் எல்கர் மீண்டும் நிதானத்துடன் பேட்டிங் செய்து வந்தார். அப்போது அபாரமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார்.

Trending


ஆனால் அதை எல்கர் ரெவியூ செய்ய அந்த பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றதால் நாட் அவுட் – கொடுக்கப்பட்டது. இருப்பினும் களத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அம்பயர் “மரஸ் எரஸ்மஸ்” இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை என கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

இதனால் மிகவும் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கடுமையான வார்த்தைகளை ஸ்டம்ப் மைக்கில் கூறினர். அந்த சமயத்தில் 60/1 என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர் இறுதியில் அவுட் ஆனபோது 101/2 என நல்ல நிலையை எட்டிவிட்டதால் இந்தியாவின் வெற்றி கைநழுவிப்போனது என்றே கூறலாம்.

இந்நிலையில் அந்த டிஆர்எஸ் தங்களின் வெற்றிக்கு சாதகமாக அமைந்ததாக டீன் எல்கர் தற்போது கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர் “அது எங்களுக்கு 3வது நாளில் சற்று அதிகமாக ரன்களை குவிக்க உதவியது. அது (டிஆர்எஸ்) எங்கள் கைப்பக்கம் திரும்பி எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

அந்த நேரத்தில் அதன் காரணமாக போட்டியை மறந்த இந்திய வீரர்கள் அதிகப்படியான உணர்ச்சியில் வெளிப்படுத்தினார்கள், இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்” என தெரிவித்த டீன் எல்கர் டிஆர்எஸ் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் கூடுதலாக சற்று ரன்கள் அடிக்க முடிந்ததாகவும் அந்த முடிவு இந்தியாவிற்கு பாதகமாக அமைந்ததால் இந்திய வீரர்கள் போட்டியை கோட்டை விட்டதாகவும் கூறினார்.

அந்த பந்தை எதிர்கொண்ட டீன் எல்கரே இவ்வாறு கூறுவதை பார்த்தால் அது கண்டிப்பாக அவுட்டு தான் என்று நிரூபணமாகியுள்ளது. அப்படியானால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமா? என இந்திய ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளார்கள்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement