
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் சமீபத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு திரும்பினார்.
புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் உத்தரபிரேதசத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர். 63 வயதாகும் அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ஓரளவு குணமடைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.